top of page

அகத்தி




agathi tree

வெற்றிலைக் கொடி படர்வதற்காக கொடிக்கால்களில் பயிரிடப் படும் சிறுமென்மரவகை. தமிழ்நாடு எங்கும் வளர்க்கப்படுகிறது. கீரை பூ பிஞ்சு ஆகியவை சமைத்து உண்ணப்படுகின்றன. இலை, பூ வோ, பட்டை ஆகியவை மருத்துவப் பயனுடையவை பொதுவாக உடல் வெப்பம் அகற்றியாகவும், கீரை மலமிளக்கியாகவும், வேர் உடல் பலம் தரும் மருந்தாகவும் பயன்படும் 1. கீரை அல்லது பூவை வாரம் ஒரு முறை சமைத்து உண்ண வெயிலில் அலைவதால் ஏற்படும் வெப்பம், மலச்சிக்கல், காபி, டீ இவை குடிப்பதால் ஏற்படும் பித்தம் ஆகியவை தீரும்.

agathi

2.அகத்தி மரப்பட்டையையும் வேர் பட்டையையும் குடிநீராக்கிக் (அகத்திப்பட்டைக் குடிநீர்) குடித்துவர, சுரம், தாகம், கை கால் எரிவு,மார்பு எரிச்சல், உள்ளங்கால் உள்ளங்கை எரிச்சல், நீர்க்கடுப்பு, நீர்த்தாரை எரிவு, அம்மைச்சுரம் ஆகியவை தீரும்.

agathi tree

3. இலைச்சாறும் நல்லெண்ணெயும் வகைக்கு 1 லிட்டர் கலந்து பதமுறக் காய்ச்சி வடிப்பதற்கு முன் கஸ்தூரி மஞ்சள், சாம்பிராணி கிச்சிலிக் கிழங்கு விளாமிச்சம் வேர் வகைக்கு 20 கிராம் தூள் செய்து போட்டுக் கலக்கி வடிகட்டி (அகத்தித் தைலம்) வாரம் ஒரு முறை தலையிலிட்டுக் குளித்து வரப் பித்தம் தணிந்து தலைவலி நீங்கும் கண்கள் குளிர்ச்சி பெறும்.


சேவலோன் வர்மக்கலை

+91-9487261280


Comments


bottom of page