நீரிழிவு என்றால் என்ன ?(Diabeties)
- Varmakalai Aasan P.Blesswin
- Feb 28, 2021
- 4 min read
Updated: Mar 26, 2021
அவசியம் ஒவ்வொருவரும் படிக்கவேண்டியது.
இதை படிக்கும்போது வேறு எந்தவேளை இருந்தாலும் ஓரம் தள்ளிவிட்டு முழுவதும் படித்துவிட்டு
வேருவேலையை தொடருங்கள் ..

கடந்த 30 ஆண்டுகளில் இந்தியாவில் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை மிகப்பெரிய அளவில் அதிகரித்துள்ளது. இதற்கு முக்கியக் காரணம் வாழ்க்கைமுறை மாற்றம் தான்.ஒரு இயந்திரம் போல் வாழ்க்கையை வாழ்ந்துக் கொண்டு இருக்கிறோம்.. எது வாழ்க்கை என்ற புரிதல் கொஞ்சம் கூட இல்லாமல் வாழ்க்கையை வாழ்ந்து கொண்டு இருக்கிறோம்..
மதுமேகம் அல்லது சலரோகம் (சர்க்கரை நோய்)வந்த நோயாளிகளுக்கு சித்தர்கள் கொடுத்த மருந்து பருத்திக் கொட்டை, எள்ளுப் புண்ணாக்கு, கோரைக் கிழங்கு, ஆவாரம்பூ. 'மாடு சாப்பிடுவதை எல்லாம் மருந்து எனச்சொல்கிறாரே’ என்று நினைக்கலாம். இப்போது டி.என்.ஏ. கட்டமைப்பு உள்ள ஹியூமன் இன்சுலின், உலகம் முழுக்க வந்துவிட்டது. இதற்கு முன்பு கோரைக் கிழங்கையே பிரதானமாகச் சாப்பிடக் கூடிய பன்றிகளின் கணையத்தில் இருந்தும், பருத்திக் கொட்டையையும், எள்ளுப் புண்ணாக்கையும் சாப்பிட்ட எருமை மாட்டுக் கணையத்திலிருந்தும்தான் இன்சுலின் எடுக்கப்பட்டது. இதில் ஓர் ஆச்சர்யம் என்ன என்றால், சித்தர்களுக்கு எவ்வாறு இது தெரிந்தது என்று தெரியவில்லை. ஏன் என்றால் பிரதானமாக பருத்திக் கொட்டையிலும், கோரைக் கிழங்கிலும், எள்ளுப் புண்ணாக்கிலும் இன்சுலின் அளவு அப்படியே இருக்கிறது. அதில் உள்ள கந்தகச் சத்தும் அப்படியே வரும். நம் உடம்பில் இருக்கக் கூடிய கார்போஹைட்ரேட்டைக் கரைக்கக்கூடிய தன்மை இதற்கு உண்டு.
கிராமங்களில் சர்க்கரை நோய் என்று தொடர்ந்து மாத்திரை சாப்பிடுபவர்களைப் பார்க்கவே முடியாது. அரை கிலோ எள்ளு புண்ணாக்கு, அரை கிலோ பருத்திக் கொட்டை, அரை கிலோ ஆவாரம்பூ, 100 கிராம் கருஞ்சீரகம் இவற்றை உரலில் இட்டு இடித்துவைத்துக் கொள்கிறார்கள். இதில் ஒரு கை அளவு எடுத்து சிறிது கருப்பட்டி, பனை வெல்லம் சேர்த்து நன்கு கொதிக்கவைத்து, அதை நன்றாக வடிகட்டி காலையிலும் இரவிலும் தொடர்ந்து சாப்பிடுவார்கள். இப்படித் தொடர்ந்து செய்யும் போது, சர்க்கரை நோய் தானா கவே சரியாகிவிடும்.
சர்க்கரை நோய் என்பது தனி நோய் கிடையாது. இது பல நோய்களுடைய சார்பு நோய் ஆகும். சிறுநீரகச் செயலிழப்புகூட உண்டாகலாம். நினைவுத்திறன் குறைந்து போவது, மூளைத்திறன் குறைந்துபோவது இப்படி பல நோய்களைக் கொண்டுவரக் கூடிய நோய் இது.
நெல்லிக்காய், கடுக்காய், தான்றிக்காய் இந்த மூன்றையும் நாடி அறிந்து கலந்துவைத்து, திரிபலா என்கிற சூரணத்தையும் சாப்பிடும்போது சர்க்கரை கட்டுப்படும்.
சமையலில் சீரகத்துக்குப் பதிலாக அல்லது சீரகத்துடன் கருஞ்சீரகத்தையும் சேர்ப்பது, சர்க்கரைக்கு அற்புதமான ஒரு மருந்தாக இருக்கும்.
சர்க்கரை நோய் என்றால் என்ன?
நாம் சாப்பிடும் உணவு,செரிமானத்தின்போது குளுக்கோஸாக மாற்றப்பட்டு ரத்தத்தில் கலக்கிறது.குளுக்கோஸ்தான் நமக்கு ஆற்றல் தரக்கூடியது. குளுக்கோஸை நம்முடைய செல்களால் நேரடியாகப் பயன்படுத்த முடியாது.
இதற்கு உதவ, கணையம் (Pancreas) இன்சுலினை சுரக்கிறது.ரத்தத்தில் கலக்கும் இன்சுலின், செல்கள் குளுக்கோஸைப் பயன்படுத்தச் செய்து, ரத்தத்தில் சர்க்கரை அளவைக் கட்டுக்குள்வைக்க உதவுகிறது.
இன்சுலின் சரியாக சுரக்கவில்லை என்றாலோ, ரத்தத்தில் சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தப் போதுமானதாக இல்லை என்றாலோ, ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரித்துவிடும். இதைத்தான் சர்க்கரை நோய் என்கிறோம்.
முதன் முதலில் செயற்கை இன்சுலின் கண்டுபிடிக்கப்பட்டது எதற்காக என்று தெரியுமா????சர்க்கரை நோயாளிகளுக்கு சர்க்கரையை கட்டுப்பாட்டில் வைப்பதற்காக அல்ல!!!ஆங்கில வைத்தியத்தில் ஒரு அரை நூற்றாண்டுக்கு முன்பு மனித உடலில் ஒரு சத்திர சிகிச்சை ( OPERATION ) செய்ய வேண்டும் என்றால் அதற்கு நிறைய முன்னேற்பாடுகள் செய்யப்பட வேண்டும்.அதில் முக்கியமான ஒன்று உடம்பில் கத்தியால் கீரி காயம் உண்டாகி இரத்தம் வெளிப்பட்ட அடுத்த வினாடி உடலில் உள்ள இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவு வினாடிக்கு வினாடி ஏறி அளவு கடந்த மிக அதீதமான நிலையை எட்டிவிடும்.எடுத்துக்காட்டாக 600 மிகி முதல் 900 மிகி வரை எட்டும்.இது ஏன் நிகழ்கிறது.
உடல் கிழிக்கப்பட்டு திறந்த நிலையில் , கிருமிகள் உடலின் உள்ளே நுழையாமல் இருக்கவும் ,காயம் ஆறப் போராடவும் உடல் தயாராகும் நிலைதான் இந்த சர்க்கரை அளவு அதிகரித்தல்.இது போன்ற சத்திர சிகிச்சை ( OPERATION ) செய்ய இயற்கையாக உயரும் சர்க்கரையை கட்டுப்பாட்டில் வைக்கத்தான் முதன் முதலில் இன்சுலின் பயன்பட்டது .
ஒரு நாய் உங்களை விரட்டுகிறது.அந்த பயத்தில் உடனே உங்களால் தாவிக் குதிக்க முடியாத உயரத்தை நீங்கள் சர்வ சாதாரணமாகத் தாவுவீர்கள்.ஓட்டமோ ஒரு குதிரை ஓடும் வேகத்தைவிட அதிக வேகமாக ஓடுவீர்கள்.இந்த மாயா ஜாலக் காரியங்களையும் செய்வது நம் உடலில் சிறு நீரகத்தின் உச்சியில் உள்ள தொப்பிச் சுரப்பி, என்ற அட்ரீனலீன் சுரப்பிதான் அது.
நாய் விரட்ட ஆரம்பித்தவுடன் அட்ரீனல் சுரப்பி அட்ரீனலீனை சுரப்பதால் ,உடலில் இது வரை சேர்த்து வைக்கப்பட்ட செறிவூட்டப்பட்ட சர்க்கரை அனைத்தையும் அவிழ்த்து இரத்தத்தில் கொட்ட ஆரம்பிக்கிறது .எடுத்துக்காட்டாக 600 மிகி முதல் 900 மிகி வரை எட்டும்.இதயம் அட்ரீனலீன் உதவியினால் இந்தச் சர்க்கரையை உபயோகித்து தன் வேகத்தை அதிகரித்து,(இதயம் தான் இயங்க இரத்தத்தில் இருக்கும் சர்க்கரையில் இருந்தே தனக்கு சக்தியை பெறுகிறது) ,இரத்த ஓட்ட வேகத்தை அதிகரிக்கிறது .உடலில் உள்ள தசைகள் அனைத்தும் , இந்த அதிகரிக்கப்பட்ட சர்க்கரையினால் மிக வேகமாக செயல்பட்டு ஆபத்திலிருந்து தப்பிக்கிறது.இந்த உடலின் அதீத செயல்பாட்டை உபயோகித்துத்தான் ஓட்டப் பந்தய விளையாட்டுக்களில் , ஊக்க மருந்தால், தட கள வீரர்கள் வெல்ல முயற்சிப்பதும்.
இரத்தத்தில் சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்தி வைத்துள்ளவர்களுக்கு ஆபத்து சமயத்தில் மேற்கண்ட எதுவும் நிகழாது.உதாரணமாக இரத்தத்தில் சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்தி வைத்துள்ளவர் கடுமையான விபத்தில் சிக்கி அதிக இரத்தப் போக்கில் இருப்பவருக்கு அவரது உடலில் சர்க்கரை அளவு அதிகரிக்காததால், இரத்தப் போக்கு தடுக்கப்படாது விடப்படும் , அதனால் அதிக இரத்தப் போக்கினாலேயே அவர் உயிரிழக்கலாம்.
எனவே மேற்கண்ட இரு உதாரணங்களில் இருந்து இரத்தத்தில் சர்க்கரை அளவை கட்டுப்படுத்தி வைத்தல் என்பதே கேலிக் கூத்து என்பதையும் , இதனால் அந்த நபர் உயிரிழக்கும் ,சாத்தியக் கூறுகள்தான் அதிகம் ஆகின்றன. இத்தனையிலும் இரத்தத்தில் சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்தி வைத்துள்ள அவர் பிழைத்திருந்தாலும் , உடலின் இயக்க வேகத்தை அதிகரிக்க , அதிகரிக்கும் இதயத்துடிப்பால் இதயத்துக்கு சக்தியளிக்கும் சர்க்கரை இரத்தத்தில் உயராததால் இதயம் சக்தியிழந்து (இதயம் தான் இயங்க சக்தியை இரத்தத்தில் இருக்கும் சர்க்கரையில் இருந்தே பெறுகிறது, உடலின் வேகம் அதிகரிக்கும் போது உடலில் உள்ள மற்ற உறுப்புக்களும் சர்க்கரையை எடுத்துக் கொள்ளுவதால்) , இரத்தத்தில் சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்தி வைத்துள்ள நபரின் இதயம் இயங்க இயலாத அளவில் இரத்தத்தில் சர்க்கரை இருக்கும் நிலையில் இதயம் தன் இயக்கத்தை நிறுத்தும் போது இதயத் தாக்கு ( HEART ATTACK )நேரிடுகிறது.
ஆங்கில மருத்துவர் சொல்வார் “நானும் எவ்வளவோ போராடிப் பார்த்துவிட்டேன்.கடைசியில் இதயத்தாக்குதல் வந்ததால் நோயாளர் இறந்துவிட்டார். கடவுள் அவருக்கிட்ட ஆயுள் அவ்வளவுதான் ” என்பார். ஆங்கில மருத்துவம் சர்க்கரையை கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறேன் பேர்வழி என்று கடைப்பிடித்த வைத்திய முறைதான் இந்த இறப்புக்கு காரணம் என்று உணராமல் ,நாமும் “இதயத் தாக்கு ( HEART ATTACK ) வந்துவிட்டால் அவ்வளவுதான் ஒன்றும் செய்ய இயலாது ”என்று சொல்லிக் கொண்டே உச்சுக் கொட்டிக் கொண்டே போய் அவரை சுடு காட்டில் அடக்கம் செய்துவிட்டு அத்துடன் அவரை மறந்துவிடுவோம்.நமக்கும் ஒரு நாள் இந்த நிலைதான் என்பதை அடியோடு மறந்துவிடுவோம் .என்னே நமது அறிவீனம்.
தரமில்லாத சர்க்கரைக்கு கணையம் இன்சுலின் தராது .இன்சுலின் தரப்படாத சர்க்கரை உடலைவிட்டு வெளியேறியே தீரும்.அவையத்தனையும் வீணான சர்க்கரயே. ஆங்கில மருத்துவம் உடலில் சுற்றும் தரமற்ற சர்க்கரைக்கு தரும் , தன்னிச்சையான இன்சுலினால் தரமற்ற சர்க்கரை உடலின் செல்களுக்குள் நுழையும். விளைவு செல்கள் அனைத்தும் அழுகிச் சாகும்.உடலின் பல பகுதிகளிலும் , ஏற்கெனவே இரத்தத்தில் சர்க்கரையினால் சூழப்பட்ட ஹீமோகுளோபினால் உடலின் செல்களுக்கு சரியாக ஆக்ஸிஜன் கிடைக்காமல் சாகும் செல்களோடு , தரமற்ற சர்க்கரை உள்ளே நுழைவதால் அழுகி இறக்கும் செல்களும் சேர உடலின் பல பாகங்களிலும் பல குறைபாடுகள் நிகழ்கின்றன.
சிலர் கேள்வி கேட்பார்கள் “ நான் ஆங்கில மருந்துகள் எடுத்துக் கொண்டே , இரத்தத்தில் சர்க்கரையின் அளவை கட்டுப்பாட்டுக்குள் வைத்துக் கொண்டே , சித்த மருந்துகளை சாப்பிடுகிறேன்” என்பார்கள். அவர்களைப் பார்த்தால் அழுவதா சிரிப்பதா என்றே தெரியவில்லை. உடலில் கெட்டுப் போன சர்க்கரையை செல்களுக்குள் தள்ளும் வேலையைச் செய்து கொண்டே செல்களை எந்த விதத்தில் சரி செய்ய இயலும்.அல்லோபதி மருந்துகளை (அவற்றை மருந்துகள் என்று சொல்வதே தவறு , விஷங்கள் என்றுதான் சொல்ல வேண்டும் ) எடுப்பதே தவறு என்று நான் மீண்டும், மீண்டும் நிரூபணங்களோஒடு சொல்லி வரும் வேளையில் இது போன்ற கேள்விகள் கேலிக் கூத்துதான்.
உடலில் உள்ள செரிக்கப்படும் பொருட்களுக்கு ஏற்ற வகையில் செரிமானத்திற்கு உதவும் , பித்த நீர் ( BILE ), பாங்க்ரியானிக் செரிமான நீர்களை(PANCREANTIC JUICES ) அசினார் செல்கள் (ACINAR CELLS ) சுரந்து டியோடினம் வழியாக நுழையும்.உடலில் சர்க்கரை அளவு குறைவானால் அதிகமாக்க உடலின் கணையத்தில் உள்ள பாங்கிரியாட்டிக் ஐலெட்ஸ் (PANCREATIC AISLETS ) என்ற இடங்களில் உள்ள ஆல்பா செல்கள் (ALPHA CELLS ) குளூகோகான் (GLUCAGON )என்ற நீரைச் சுரந்து உடலில் உள்ள சேமிப்பு சர்க்கரையை எடுத்து இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை அதிகமாக்கும்.
உடலில் சர்க்கரை அளவு அதிகமானால் குறைக்க (PANCREATIC AISLETS ) என்ற இடங்களில் உள்ள பீட்டா செல்கள் (BETA CELLS )இன்சுலினை (INSULIN ) சுரந்து உடலில் இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை குறைக்க, செல்களுக்குள் சர்க்கரை உள்ளே நுழைய அனுமதி கொடுத்து இரத்தத்தில் இருந்து செல்களுக்குள் சர்க்கரையை அனுப்புகின்றது .
இந்த இரண்டு செயல்களையும் கட்டுப்படுத்த டெல்டா செல்களில் ( DELTA CELLS ) உள்ள சோமாட்டோஸ்டேட்டின் ( SOMATOSTATIN) சுரந்து சமிக்கைகளைப் (SIGNALS ) புரிகிறது.இப்படி சர்க்கரை அளவு கூடினாலும் குறைந்தாலும் , கெட்ட சர்க்கரை இருந்தால் வெளியேற்றவும்,நல்ல சர்க்கரையை வீணாக்காமல் சேமித்து வைக்கவும் நம்முடலிலேயே சகல வசதிகளுடன் அமைப்புகள் இருக்க, இவற்றை சரியாக செயல்பட வழி செய்தால் போதாதா??? ஆங்கில மருத்துவம் இந்த நாளமில்லாச் சுரப்பிகளின் இடையில் புகுந்து குழப்பங்கள் விளைவிப்பதால்தான் உடல் நலிந்து , ஆங்கில மருந்துகளால் படாத பாடுபட்டு , உள்ளுறுப்புக்களும் முழுவதும் கெட்டு நோயாளர் படாத பாடுபட்டு முடிவில் அத்தனை பொறிகளும் , புலன்களும் கெட்டு இறந்தே போகிறார்.
படித்தவர்கள் பகுத்தறிவு உள்ளவர்களேயானால் சிந்திப்பீர்..இல்லை என்றால் அன்றாட முகநூல் செய்திகளை படித்துவிட்டு கடந்துசெல்பவராக
இருங்கள்..
இப்படிக்கு
பயிர் மட்டும் போதும்.களைகள் தேவையற்றது..பயிரும் களையும் உயிர்தான் என்ற கோட்பாடு இருந்தால்.களைகள் பயிரை நாசமாக்கிவிடும்.
சேவலோன் வர்மக்கலை
+919487261280
Very useful information